வாழ வைக்கும் 7ஆம் அறிவு வாழ்த்துக்கள்
7-ஆம் அறிவு வணக்கம் வாழ்த்துக்கள்
அக்னி ஸ்திரீ வணக்கம் வெறும் வாழ்த்துக்கள் மட்டுமல்ல ஒரு அற்புத மன ப்ரோக்ராம்மிங் கூட
வாழ வைக்கும் 7ஆம் அறிவு வாழ்த்துக்கள்
- வார்த்தைகளுக்கு வலிமை உண்டு .
- நல் வாழ்த்துக்களுக்கு சூரியனின் சக்தி உண்டு
- அதாவது உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு நன்மைகளையோ அல்லது தீமைகளையோ உண்டாக்கலாம்.
- ஆக்கபூர்வமான வார்த்தைகள் நன்மைகளையும் எதிர்மறையான வார்த்தைகள் தீமைகளையும் பயக்கும் .
உண்மையில் வார்த்தைகள் கூட பிறகுதான் . நம் எண்ணங்களே அத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும். ஆக்கபூர்வமான எண்ணங்கள் நன்மைகளையும் எதிர்மறையான எண்ணங்கள் தீமைகளையும் பயக்கும். நம் எண்ணங்களையே நாம் உற்று கவனிக்க வேண்டும் . சரியில்லையென்றால் உடனைடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்
நம் வார்த்தைகள் மற்றும் செயல்களை கூட மாற்றி கொள்ளலாம் . நம் எண்ணங்களை மாற்றி கொள்வது எப்படி? என்ற யோசனை மற்றும் கவலை உங்களுக்குள் இருப்பதை உணர முடிகிறது . நம் சொல் மற்றும் செயல் இரண்டுக்கும் காரணம் நம் எண்ணங்களே.
கவலை வேண்டாம். எண்ணங்களையே மாற்றிவிடலாம், எண்ணங்களையும் மாற்றிவிடலாம் . உங்கள் குழந்தைகளை நன்கு வளர்க்கலாம். அவர்களுக்கு எண்ணங்கள் தோன்றுவதற்கு முன்பே நல்ல எண்ணங்கள் மட்டுமே வர ஒரு அற்புத நுணுக்கம் இதோ .
அதாவது கெட்ட மற்றும் தவறான எண்ணங்கள் வராமல் செய்ய நுணுக்கம். அதற்காகவே 7-ஆம் அறிவு “MBN ஜன்னல்கள்” (“MBN WINDOWS”) என்ற அற்புத பரிசினை உங்களுக்குத் தருகிறோம்.
“MBN ஜன்னல்கள்” (“MBN WINDOWS”) என்ற தலைப்பின் கீழ் சென்று பார்க்கவும். அந்த ஜன்னல்களைப் பயன் படுத்தி நம் சிந்தனையை அடியோடு மாற்றிவிடலாம் .
அக்னி ஸ்திரீ வணக்கம் வாழ்த்துக்கள்
அக்னி ஸ்திரீ வணக்கம் வெறும் வாழ்த்துக்கள் மட்டுமல்ல ஒரு அற்புத மன ப்ரோக்ராம்மிங் கூட.
மன விஞ்ஞானத்தின் முழு பயன்களையும், நன்மைகளையும் பெற உதவும் இயக்கம் அக்னி ஸ்திரீ.
மன புரோகிராமிங் அனைவரும் கற்று வெற்றி கனிகளைப் பறிப்பார்கள். கணினியில் பதிவு செய்வதே விடையாக வரும். அதேபோல்தான் அக்னீ ஸ்தீரி அரிய விஷயங்களைக் கற்றுத் தரும். மனதில் எது விதைக்கப்படுகின்றதோ அதுவே முளைக்கும் மற்றும் வளரும். விதைகளை மாற்றி பயிர்களை மாற்றலாம். ஆகவே உறுப்பினர்கள் பேசும் வார்த்தைகளில் முழு கவனம் செலுத்துவார்கள். உதாரணம் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் செலுத்துவதில் கூட அக்கறை காட்டுவார்கள். ஒருவரை சந்திக்கும் போது “வாழ்க வளமுடன், நலமுடன், மகிழ்ச்சியுடன்” என்று வாழ்த்துவார்கள்.
வாழ்த்துக்களை மனமுவந்து கூறும் போது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உணர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள்.
அக்னி ஸ்திரீ வணக்கம் வாழ்த்துக்கள்
அக்னி ஸ்திரீ வணக்கம் வாழ்த்துக்கள் அன்பையும், பாசத்தையும், வாழ்த்தையும் தெரிவிக்க ஒரு சிறந்த பண்பாடு. அதுமட்டுமல்ல அது ஒரு 7-ஆம் அறிவு மனப்புரோக்ராம் கூட. ஒவ்வொருமுறை வாழ்த்து தெரிவிக்கும் போதும் ஒவ்வொருவருக்கும் தெரிவிக்கும் போது ஒரு ஆக்கப்பூர்வ அபரீத சக்தி மனதிலிருந்து அடைமழை போல் வெளியாகிறது. அதை மற்றவரை சென்று அடைகிறது. அதற்கு முன்னால் கூறியவரின் உடலை கட்டி தழுவுகிறது. எந்த அளவு நாம் அன்பைத் தெரியப்படுத்துகிறோமோ அந்த அளவு அந்த சொல்பவரைக் கட்டித் தழுவும். உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் அணுக்குள்ளும் நுழையும். வாழ்த்து கூறுபவரின் வாயுக்கு அருகேதானே அவருடைய காதுகள் இருக்கின்றன. அதனால் கூறுபவரின் காதுகளையே அந்த வாழ்த்துக்கள் சென்றடையும். அடுத்து கேட்பவரைச் சென்று அடைநது அவரைப் பரவசத்திற்கு உள்ளாக்கும். உணர்வோடு, உவகையோடு, உத்வேகத்தோடு, உற்சாகத்தோடு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.
“வாழ்க வளமுடன், நலமுடன் மகிழ்ச்சியுடன்” என்று நாம் வாழ்த்துவதே நமக்கு ஒரு சிறந்த மனப்புரோகிராமிங் ஆக அமையும். நாம் பேசும் போது ஏன் சிந்திக்கும் போதே அவற்றை நம் ஆழ்மனதும் நம் உடலில் உள்ள பல்லாயிரக்கோடி உயிரணுக்களும் கேட்கின்றன. காது கொடுத்து கேட்கின்றன. உணர்கின்றன. பதிவு செய்து வைத்து கொள்கின்றன. அந்த வார்த்தைகளின் தன்மைக்கேற்ப நமக்கு நன்மையோ தீமையோ ஏற்படுகின்றன.
நாம் ஒருவரை பார்த்து “வாழ்க வளமுடன், நலமுடன், மகிழ்ச்சியுடன்” என்று கூறும் போது, அந்த வார்த்தைகளை மற்றவர் கேட்கிறாரோ இல்லையோ, அவ்வார்த்தைகளை கூறும் நம்முடைய, நம் உடலில் உள்ள பல்லாயிரக்கோடி உயிரணுக்களும் கேட்கின்றன. அந்த வார்த்தைகளுக்குரிய பயன்களையோ, துன்பங்களையோ நமக்கு நாம் கூறிய அந்த வார்த்தைகள் நமக்கே உண்டாக்கும்.
நாம் ஒருவரைப் பார்த்து “நாசமாக போ” என்று கூறினால் அது நமக்குத்தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும். நம் காதுகாகள்தான் நம் வாயுக்கு வெகு அருகாமையில் உள்ளன. அங்குத்தான் நம் வார்த்தைகள் முதலில் சென்று அடைகின்றன.
மேலும் ஒருவரை நாம் திட்டும் போதோ அல்லது சபிக்கும் போதோ அதற்கான ரௌத்ர அதிர்வுகளை நம் உடலில் உள்ள பல்லாயிரக் கோடி உயிரணுக்கள் உணர்கின்றன.
நாம் மற்றவர்களுக்கு கூறும் சாபத்தை உயிர் அணுக்கள், தங்களுக்குத்தான் கூறுகிறோம் என்று தவறாக புரிந்துக் கொண்டு அதையே நினைத்து செயல் பட ஆரம்பிக்கின்றன. விளைவு முழு பாதிப்பும் நமக்குத்தான்.
ஒருவர் நமக்கு கேடு செய்கிறார் என்றால் அவரை சபிப்பதால் அல்லது திட்டுவதால் அவருக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. அதைக் கூறும் நமக்குத்தான் பாதிப்பு உண்டாகும்.
நமக்கு கெடுதல் செய்தவற்கு “நாம் எப்படி பாடம் கற்பிப்பது?” அதற்கு ஒரே வழி அவரைவிட பன்மடங்கு நாம் வாழ்க்கையில் உயர்ந்து காட்டுவதுதான். மிகச்சிறந்த விடையும்கூட. அப்படி உயர முடியுமா? நிச்சயம் முடியும். இங்கு தரப்பட்டுள்ள 7-ஆம் அறிவு நுணுக்கங்களைப் பயன்படுத்துங்கள். வெற்றி மேல் வெற்றி உங்களைச் சேரும்.
மற்றவர்கள் உங்களைப் பார்த்து கூறும் வார்த்தைகள்
உங்கள் வார்த்தைகளுக்கே வலிமை உண்டு என்றால் மற்றவர்கள் உங்களைப் பார்த்து கூறும் வார்த்தைகளுக்கு எவ்வளவு தாக்கம் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுவும் நல்லவர்கள். வயதில் முதிர்ந்தவர்கள் , அறிஞர்கள், ஞானிகள் வார்த்தைகளுக்கு வலிமை மிக அதிகம். அவர்கள் வாழ்த்தினால் வாழ்வோம். அவர்கள் நம்மைத் தூற்றினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவோம். ( ஞானிகள் கொடுக்கும் சாபம் அவர்களைப் பாதிக்காது, அதாவது சாபம் கொடுக்கும் ஞானிகளைப் பாதிக்காது . இதையெல்லாம் கடந்துதான் ஞானிகள் ஆகிறார்கள் .)
அவர்களிடம் உண்மையில் நல்ல முறையில் நாம் நடந்து கொள்வது எப்போதும் நல்லது . அவர்களிடம் உண்மையான அன்போடு நெருங்குவது நல்லது . நீங்கள் அவர்களுக்குத் தரும் மரியாதையைப் பொறுத்தே அவர்கள் வாழ்த்தின் வலிமை இருக்கும் .
அதற்காகத்தான் காலில் விழுந்து ஆசி பெரும் பழக்கம் உண்டாயிற்று. ஆனால் அது இன்று தவறாக பயன் படுத்தப்பட்டு அந்த பண்பாட்டிற்கே இப்போது களங்கம் வந்து விட்டது .
நீங்கள் காட்டும் அன்பு, அடக்கம் , பவ்வியம் ஆகியவையே பெரியவர்கள் உங்களுக்குத் தர போகும் வாழ்த்தின் ஆழத்தை உருவாக்கும். நீங்கள் அவர்களுக்குக் காட்டும் மரியாதை அவர்கள் வாழ்த்தின் ஆழத்தை அதிகரிக்கும்.
“எல்லா வளங்களையும் பெற்று நீடுழி வாழ்க” என்று உங்களை அவர்கள் உளமார வாழ்த்துவது என்பது உங்கள் நடத்தையில்தான் உள்ளது . அப்படி வாழ்த்துக்கள் பெற்றால் பூகம்பம் கூட உங்களை ஒன்றும் செய்யாது. இவை அனைத்தும் மூடநம்பிக்கையல்ல . மன விஞ்ஞானத்தின் (Mind Science) ஒரு முக்கிய பிரிவாகும். நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பெறும் வாழ்த்துக்கள் நீங்கள் உங்களைச் சுற்றி நீங்கள் கட்டி கொள்ளும் ஒரு இரும்பு கோட்டையாகும் .
நீங்களும் மற்றவர்களை வாழ்த்தலாம் .
நீங்கள் வாழ்த்து தெரிவிப்பது என்பது ஆண் . பெண் ,வயதில் இளையவர்கள். நம்மை விட வயது முதிர்ந்தவர்கள் என்று எவரையும் ஜாதி மதம் மொழி இனம் பேதமின்றி வாழ்த்தலாம். ஆனால் ஆசிர்வதிப்பது என்பது உங்களை விட வயதில் குறைந்தவர்களுக்கு மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்.
நீங்கள் உங்களை விட வயதில் குறைந்தவர்களை மனமுவந்து ஆசிர்வதிக்கலாம். அவர்கள் உங்கள் ஆசியைப் பெற நிற்கும் போது ஒரு கணம் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் ஈடுபாடோடு உருவாக்குங்கள். அந்த எண்ணத்தை உடல் முழுவதும் உடல் செல்களுக்குப் பரவவிடுங்கள். ஆசி விழுங்கும்போது உங்கள் உடலில் ஒரு மெய்சிலிர்ப்போ , புல்லரிப்போ உண்டாவது நல்லது. இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் . ஒன்றன் பின் ஒன்றாக பிறகு ஆசி வழங்குங்கள். நிதானமாக கூறுங்கள். அந்த வார்த்தைகள் ஒவொன்றின் பொருள் மனம் அறிந்து, உடல் செல்கள் முழுவதும் அவற்றை உணர்ந்து நீங்கள் கூற வேண்டும்.
இதோ ஒரு சிறந்த முன் மாதிரி வாழ்த்து
வாழ்க வளமுடன் ,….
வாழ்க நலமுடன் ….
வாழ்க மகிழ்ச்சியுடன்…
வாழ்க சிறப்புடன் …
வாழ்க செழிப்புடன் …
வாழிய வாழியவே ….
என்று வாழ்த்துங்கள் .
பாடம் ஒப்பிப்பது போல் இருக்கக்கூடாது
வார்த்தைகளுடன் இணைந்து இழைந்து கூற வேண்டும்
இப்படி நீங்கள் செய்து கொண்டே இருந்தால் நீங்கள் கூறுவது அப்படியே பலிக்கும். ஒரு ஞானி அளவிற்கு நீங்கள் உயர்ந்து விடுவீர்கள். இதனால் வேறு பல அற்புதங்களும் நடந்துள்ளன .
குடும்பங்களுக்கு இடையே இருந்த தீர பகை தீர்ந்தது.
வெறுப்பு அன்பாக மாறியது.
நட்பு வளர்ந்தது .
நல்லெண்ணம் உயர்ந்தது .
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”
குறள் பொருளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்